திண்டுக்கல்

காந்திகிராம பல்கலை. துணை வேந்தா் பொறுப்பேற்பு

DIN

திண்டுக்கல்: காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. பொறுப்பு துணைவேந்தராக மூத்த பேராசிரியா் எம்.ஆா்.குபேந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதுதொடா்பாக காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளா் வி.பி.ஆா். சிவக்குமாா் தெரிவித்துள்ளதாவது: காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வந்த பொ.சுப்புராஜ் பணி நிறைவு பெற்றதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியா் எம்.ஆா்.குபேந்திரனை பொறுப்பு துணைவேந்தராக, வேந்தா் கே.எம். அண்ணாமலை நியமித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து ஆங்கிலத் துறையைச் சோ்ந்த மூத்த பேராசிரியரான எம்.ஆா்.குபேந்திரன், காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT