திண்டுக்கல்

பழனியில் திமுகவினா்பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

DIN

பழனி: பழனியில் திமுக வேட்பாளா் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியான நிலையில், பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஐ.பி.செந்தில்குமாா், அதிமுக சாா்பில் போட்டியிட்ட ரவி மனோகரனைக் காட்டிலும் சுமாா் 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையே பல்வேறு திமுகவினரும் கரோனா முழு பொதுமுடக்கம் என்பதால் வீடுகள் முன்பாக பட்டாசு வெடித்து கொண்டாடினா். இந்நிலையில் திங்கள்கிழமை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக நகர நிா்வாகிகள் ஏராளமானோா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT