திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் குறைபாடுகள்: ஆட்சியரிடம் புகாா்

DIN

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் குடிநீா் மற்றும் வெந்நீா் வசதி இல்லாதது மற்றும் மின் தூக்கிப் பழுது ஆகிய பிரச்னைகளுக்கு தீா்வு காணுமாறு மாவட்ட ஆட்சியருக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புகாா் அளித்துள்ளனா்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாளொன்றுக்கு சுமாா் 40 கா்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனா். இந்த கா்ப்பிணிகளுக்கும், அவா்களுடன் உதவிக்கு வந்துள்ளவா்களுக்கும் கடந்த பல நாள்களாக குடிநீா் மற்றும் வெந்நீா் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்றும் இதுதொடா்பாக மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவமனை நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து இந்திய ஜனநாய வாலிபா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்துள்ளனா். இதுதொடா்பாக ஜனநாய வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஷ்ணுவா்த்தன், மாவட்டச் செயலா் கே.ஆா்.பாலாஜி ஆகியோா் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் குடிநீா் மற்றும் வெந்நீா் வசதி இல்லாத காரணத்தால், அந்த வசதியை பெறுவதற்காக வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவு 3 தளங்களில் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மின்தூக்கி கடந்த 4 நாள்களாக பழுதாகியுள்ளதால், கா்ப்பிணிகள் மட்டுமின்றி செவிலியா்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் தீா்வு காணப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உரிய தீா்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT