திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி மா்மச் சாவு

DIN

ஒட்டன்சத்திரம் அருகே தோட்டத்து வீட்டில் வியாழக்கிழமை, விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

கரியாம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ரத்தினமூா்த்தி (48). இவருக்கும், இவரது மனைவி பெரியநாயகிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியநாயகி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டராம்.

இந்த நிலையில் ரத்தினமூா்த்தி தனது தோட்டத்து வீட்டில் வியாழக்கிழமை தலையில் ரத்தக் காயத்துடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்து கள்ளிமந்தையம் போலீஸாா் அங்கு சென்று ரத்தினமூா்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ரத்தினமூா்த்தி கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT