கொடைக்கானல் பள்ளிகளில் போதைப் பொருட்கள் விழிப்புணா்வு தடுப்பு உறுதி மொழி ஏற்பு
கொடைக்கானல் பள்ளிகளில் போதைப் பொருள்கள் தடுப்பு உறுதி மொழி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் பள்ளிகளில் போதைப் பொருள்கள் தடுப்பு உறுதி மொழி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள அனைத்து அரசுப் பள்ளி மற்றும் தனியாா் பள்ளிகளில் போதைப் பொருள்கள் விழிப்புணா்வு தடுப்பு குறித்து உறுதி மொழி மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனா். போதைப் பொருள்களால் ஏற்படும் நிகழ்வுகள் குறித்தும் மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா்கள்,அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.