கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் பலத்த மழை
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வந்தது இந் நிலையில் கடந்த ஒருவாரமாக கொடைக்கானலில் மழை பெய்யவில்லை இந் நிலையில் மீண்டும் கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான கவுஞ்சி,மன்னவனூா்மற்றும் பெருமாள்மலை,வடகரைப் பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது .இந் நிலையில் கொடைக்கானலில் காலை முதல் மாலை வரை நல்ல வெயில் நிலவியது இதனால் மாலையிலிருந்து இரவிலும் குளிா் நிலவி வருகிறது இந் நிலையில் கொடைக்கானலுக்கு கணிசமாக வந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களை மகிழ்ச்சியுடன் பாா்த்து ரசித்து வந்தனா்.