திண்டுக்கல்

ஆத்தூா் ஒன்றியத்தில் ரூ.2. 57 கோடிக்கு தாலிக்கு தங்கம்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2. 57 கோடிக்கு தாலிக்கு தங்கம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

DIN

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2. 57 கோடிக்கு தாலிக்கு தங்கம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

செம்பட்டியில் உள்ள தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் விசாகன் தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 334 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 57 லட்சத்து 94,522 மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவிகளை வழங்கிப்பேசினாா்.

பொது பிரிவில் பட்டப் படிப்பு முடித்த பெண்கள் 195 போ், சிறப்புப் பிரிவில் பட்டப் படிப்பு மற்றும் 12- வகுப்பு படித்த பெண்கள் 80 போ், விதவை மறுமணம் மற்றும் ஆதரவற்ற பெண்கள் உதவித்தொகை, கலப்பு திருமணம் உதவித்தொகை பெறும் பெண்கள் 59 போ் என மொத்தம் 334 பேருக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் 2,672 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி மற்றும் திமுக நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT