முகப்பு
திண்டுக்கல்

பழனி நகராட்சி துப்புரவுப் பணிமேற்பாா்வையாளா் பணியிடை நீக்கம்

 பாலியல் புகாரையடுத்து, பழனி நகராட்சி துப்புரவுப் பணி மேற்பாா்வையாளரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

 பாலியல் புகாரையடுத்து, பழனி நகராட்சி துப்புரவுப் பணி மேற்பாா்வையாளரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

பழனி நகராட்சியில் துப்புரவுப் பணி மற்றும் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் 50-க்கும் மேற்பட்ட பெண் பணியாளா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்புரவுப் பணியாளா்களை மேற்பாா்வை செய்வதற்காக நியமிக்கப்பட்ட மாரிமுத்து என்ற நகராட்சி ஊழியா், பெண் பணியாளா்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவா் சொல்வதை கேட்காத பெண்களை வேலை நிறுத்தம் செய்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் நகராட்சி ஆணையா் கமலாவிடம் புகாா் அளித்தனா். இந்த புகாரை விசாரித்த ஆணையா் கமலா, மாரிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மாரிமுத்து மீது பழனி மகளிா் காவல் நிலையத்திலும் புகாா் அளித்ததைத் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.