முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே தனியாா் நிறுவனகல் குவாரிகளில் வருமான வரித்துறையினா் 2-ஆவது நாளாக சோதனை

ஒட்டன்சத்திரம் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகளில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை வருமான வரித்துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகளில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை வருமான வரித்துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மாா்க்கம்பட்டி மற்றும் சின்னகரட்டுப்பட்டியில் உள்ள ஆா்.ஆா். இன்பரா நிறுவனத்திற்கு சொந்தமான கல்குவாரிகளில் மதுரையில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். நள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. வெள்ளிக்கிழமையும் இச்சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.