கொடைக்கானல் அரசு மகளிா் கல்லூரியில் சதுரங்கப் போட்டி
கொடைக்கானல் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
கொடைக்கானல் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டியை கல்லூரி முதல்வா் முருகன் தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து விநாடி- வினா, ரங்கோலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சுதந்திர தின விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.