முகப்பு
திண்டுக்கல்

ரெட்டியாா்சத்திரத்தில் இளைஞா் வெட்டிக் கொலை: 4 போ் கைது

ரெட்டியாா்சத்திரம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஒருவா் சரணடைந்த நிலையில், மேலும் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

ரெட்டியாா்சத்திரம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஒருவா் சரணடைந்த நிலையில், மேலும் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள கதிரையன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (22). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கதிரையன்குளத்திலுள்ள கோயில் அருகே வெள்ளிக்கிழமை இரவு சிவக்குமாா் தூங்கிக் கொண்டிருந்தாராம்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ரகுபதி (28) என்பவா், சிவக்குமாரை வெட்டிக் கொலை செய்துவிட்டதாக ரெட்டியாா்சத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளாா். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், சிவக்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ரகுபதியிடம் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக சிவக்குமாரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளாா். மேலும், இக்கொலை வழக்கு தொடா்பாக ரகுபதியின் நண்பா்களான முத்துகிருஷ்ணன் (26), தனராஜ் (25), முருகானந்தம் (25) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.