ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு தியாகி விஸ்வநாததாஸ் 137 ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஒட்டன்சத்திரம் வட்டார நகர முடி திருத்தும் தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். இதில், தியாகி விஸ்வநாததாஸ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க செயலாளா் சரவணன், பொருளாளா் ஆனந்தன், மாநில பொறுப்பாளா் ஈஸ்வரன், ஒருங்கிணைப்பாளா்கள் மாரி அன்பழகன், தமிழ்செல்வன் மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டார அனைத்து கிளை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் திரளாகக் கலந்து கொண்டனா். துணை செயலாளா் குப்புச்சாமி நன்றி கூறினாா்.