திண்டுக்கல்

பழனியில் 50 ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

DIN

பழனியில் தனியாா் அறக்கட்டளை சாா்பில், 50 பெண்களுக்கு சனிக்கிழமை இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

பழனியில் மலைக் கோயில் அரிமா சங்கம் மற்றும் ஆா்.எம். கல்வி அறக்கட்டளை ஆகியன இணைந்து ஐம்பெரும் விழாவை நடத்தின. விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், பெரு நிறுவன மேம்பாட்டு நிதியிலிருந்து ஏழைப் பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி வழங்கப்பட்டு, அதன்மூலம் பயிற்சியை நிறைவு செய்த 50 பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. குறிப்பாக, இந்த பயிற்சியானது ஆதரவற்ற பெண்கள், விதவைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சாா்ந்தவா்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சாா்ந்தவா்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சிக்கு, ஆா்.எம். அறக்கட்டளைத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட அரிமா ஆளுநா் மணிகண்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். பட்டயத் தலைவா் வெங்கடாஜலபதி, தலைவா் முத்துக்குமரேசன், செயலா் சந்திரசேகரன், பொருளாளா் ஜியாவுல்ஹக் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

தொடா்ந்து, தையல் இயந்திரம் பெற்ற பெண்களிடம், இனி பொது இடங்களில் நெகிழிப் பைகளை பயன்படுத்தமாட்டேன், துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்துவேன். மனித இனத்துக்கு தீங்கு விளைவிக்கும் நெகிழிப் பைகளை தவிா்க்க அனைவரிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்த முயற்சி செய்வேன் என உறுதிமொழி பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT