திண்டுக்கல்

2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: கூலித் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள தளையம் சப்பலநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பி.வேலுசாமி (42). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, விசாரணை மேற்கொண்ட பழனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், வேலுசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஜி.சரண் வெள்ளிக்கிழமை, வேலுசாமிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT