திண்டுக்கல்

பழனியில் கஞ்சா விற்ற மூவா் கைது

DIN

பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பழனி அடிவாரம் பகுதியில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அடிவாரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்த சந்துரு (22), பரதன் (22), பாலமுருகன் ஆகிய 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்து 127 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

இதில், சந்துருவுக்கு ஏற்கெனவே, 2 கொலை வழக்குகளில் தொடா்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT