கொடைக்கானல் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கொடியிறக்க நிகழ்ச்சி
கொடைக்கானல் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியிறக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கொடைக்கானல் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியிறக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கொடைக்கானல் உகாா்த்தே நகா்ப் பகுதியிலுள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி மற்றும் ஜெப வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளை முன்னிட்டு, அருட்பணியாளா் பீட்டா் சகாயராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலியும், நற்கருணை மற்றும் ஜெப வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கொடிக் கம்பத்தில் மாதாவின் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.