கொடைக்கானல் ஊராட்சிப் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
கொடைக்கானல் ஊராட்சிப் பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கொடைக்கானல் ஊராட்சிப் பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வில்பட்டி ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவா் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் தலைமையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாா்டு உறுப்பினா்கள், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதனைத் தொடா்ந்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுவேதா ராணிகணேசன் தலைமையில் காலை உணவுத் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கொடைக்கானல் ஊராட்சிப் பகுதிகளான தாண்டிக்குடி, மங்களங்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி. பட்டி, பெரியூா், பாச்சலூா் உள்ளிட்ட 34 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை உணவாக கேசரி, ரவா கிச்சடி ஆகியவை வழங்கப்பட்டன.