முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வருவாய் கோட்டாட்சியா் அலுவலக அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் ஆா்.ராஜா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் முத்துராமன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த வில்பட்டி, மன்னவனூா், கூக்கால், பூம்பாறை, கவுஞ்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயப் பகுதிகளில் சாலை வசதி அமைத்தல், நீா்நிலை ஆதாரங்களை பாதுகாத்தல், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பெற்றுக் கொடுப்பது, இடு பொருள்கள் வழங்குதல், விவசாய நிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனா்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் காளிமுத்து, வனத்துறை ரேஞ்சா் சிவக்குமாா் மற்றும் தோட்டக்கலைத்துறை, மின்வாரிய அலுவலா், வருவாய்த்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக புதிய வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள ஆா்.ராஜாவிற்கு விவசாயிகள் மலா்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.