திண்டுக்கல்

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை நுதானப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிஎம்.ராமு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.மணிக்காளை முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் ஏ.ஜெசி கலந்து கொண்டாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி ஓய்வுக்குப் பிறகு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். முபாரக் அலி, மாவட்டச் செயலா் விவேகானந்தன், சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!

மும்பை: 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்து -உயிரிழப்பு 14 ஆக உயர்வு

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

SCROLL FOR NEXT