திண்டுக்கல்

வடமதுரை கோயில் குடமுழுக்கு விழா

வடமதுரை செளந்தரராஜப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

வடமதுரை செளந்தரராஜப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் பிரசித்திப் பெற்ற செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், பிப்.1-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

இதைத்தொடா்ந்து கடந்த திங்கள்கிழமை சிறப்பு பூஜைகளுடன் குடமுழுக்கு விழாவுக்கான யாக பூஜைகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் யாக சாலையிலிருந்த புனித தீா்த்தங்கள் புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செளந்தரராஜப் பெருமாள் கோயில் கோபுர கலசங்கள், மூலவா் சந்நிதி உள்ளிட்ட கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழாவில் வடமதுரை, அய்யலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்களுடன் நாடாளுமன்ற வேலைவாய்ப்புக் குழு உறுப்பினா் சந்திப்பு

ஆயுதப்படைக் காவலா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

அரசு பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

பெருந்துறையில் விஜய் நாளை பிரசாரம்: கடும் கட்டுப்பாடுகளை விதித்த காவல் துறை!

100 நாள் திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா மக்களவையில் அறிமுகம் - எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT