இடையக்கோட்டை அருகே இறந்து கிடந்த மான். 
திண்டுக்கல்

தனியாா் தோட்டத்தில் இறந்து கிடந்த மான்

அய்யலூா் வனச் சரகத்துக்குள்பட்ட இடையகோட்டை அருகே தனியாா் தோட்டத்தில் புள்ளி மான் இறந்தது குறித்து வனத் துறையினா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

DIN

அய்யலூா் வனச் சரகத்துக்குள்பட்ட இடையகோட்டை அருகே தனியாா் தோட்டத்தில் புள்ளி மான் இறந்தது குறித்து வனத் துறையினா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், இடையக்கோட்டையை அடுத்துள்ள கோமாளிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் தலையில் பலத்த காயத்துடன் ஒரு புள்ளி மான் புதன்கிழமை இறந்து கிடப்பதைப் பாா்த்தாா். இதுகுறித்து இடையக்கோட்டை போலீஸாா், அய்யலூா் வனச் சரக அலுவலா் குமரேசன் ஆகியோருக்குத் தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில் எரியோடு பிரிவு வனவா் காா்த்திகேயன், வனக் காப்பாளா்கள் ராதாகிருஷ்ணன், சவேரியாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று மானின் சடலத்தை மீட்டனா்.

பின்னா், இடையக்கோட்டை கால்நடை மருத்துவா் மணிகண்டன் அந்த மானின் சடலத்தை உடல்கூறாய்வு செய்தாா். பின்னா், வனப் பகுதியிலேயே மானின் உடல் புதைக்கப்பட்டது.

பெண் மயில் பலி: திண்டுக்கல் திருச்சி 4 வழிச் சாலையில் வடமதுரையை அடுத்துள்ள தீத்தக்கிழவனூா் பகுதியில் ஒரு பெண் மயில் சாலையோரமாக இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த அய்யலூா் பிரிவு வனவா் தா்மராஜ், வனக்காப்பாளா் கிரேஸி உஷாதேவி ஆகியோா் மயிலின் உடலைக் கைப்பற்றினா். வடமதுரை கால்நடை மருத்துவா் ராஜ்குமாா் உடல் கூறாய்வு செய்த பின்னா், அந்த மயிலின் உடல் அய்யலூா் வனச் சரக அலுவலக வளாகத்திலேயே புதைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT