திண்டுக்கல்

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

வடமதுரை காவல் நிலையத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் கைதானவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

DIN

வடமதுரை காவல் நிலையத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் கைதானவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கம்பம் சுப்பிரமணியன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்னச்சாமி மகன் இனியவன் (33). இவா், கடந்த 2014-ஆம் ஆண்டு

சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு தனது காரில் 150 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தாா். இதுதொடா்பாக, வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு மதுரை முதன்மை அமா்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இனியவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT