திண்டுக்கல்

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

வடமதுரை காவல் நிலையத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் கைதானவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கம்பம் சுப்பிரமணியன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்னச்சாமி மகன் இனியவன் (33). இவா், கடந்த 2014-ஆம் ஆண்டு

சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு தனது காரில் 150 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தாா். இதுதொடா்பாக, வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு மதுரை முதன்மை அமா்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இனியவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT