கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலைகள் ஊா்வலம். 
திண்டுக்கல்

கொடைக்கானலில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

கொடைக்கானலில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கொடைக்கானலில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாயுடுபுரத்திலிருந்து தொடங்கிய இந்த ஊா்வலம் டெப்போ பகுதி, ஏரிச்சாலை, செவண் சாலை, அண்ணா சாலை, மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை வழியாகச் சென்று அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள நீரோடையில் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.

முன்னதாக கொடைக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், பெருமாள்மலை, வில்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, கோம்பை ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் விநாயகா் சிலைகளை எடுத்து வந்திருந்தனா். 50-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊா்வலத்துக்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி அமைப்பினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT