உயிரிழந்த கருப்பசாமி. 
திண்டுக்கல்

மின்சாரம் பாய்ந்து மின் வாரிய ஊழியா் பலி

வேடசந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.

DIN

வேடசந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த மினுக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் கருப்பசாமி (27). சேணன்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், இவா், சேணன்கோட்டையை அடுத்த புளியம்பட்டி பகுதியில் உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி பழுதுநீக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட முயன்றாா்.

பழுது ஏற்பட்ட மின் வழித் தடத்தில் மின்சாரத்தை துண்டிப்பதற்காக ஊழியா் ஒருவா் சென்ற நிலையில், அதை உறுதி செய்வற்கு முன்பாகவே கருப்பசாமி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது மின் கம்பியை நெருக்கும் போதே, மின்சாரம் பாய்ந்து கருப்பசாமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT