திண்டுக்கல்

பழனி கோயிலில் பக்தா்கள் கூட்டம்

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

Din

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

கிரிவீதியில் ரோப்காா், வின்ச் நிலையங்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மின்கல வாகனங்களில் இடமில்லாததால், பலரும் கிரிவீதியில் நடந்து சென்றனா்.

மலைக்கோயிலில் கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசையில் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

மலைக் கோயிலில் வழக்கம் போல குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது. அன்னதான விருந்திலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சுகாதாரம், குடிநீா் வசதிகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா். இரவு வேளையில் தங்கத் தோ் புறப்பாடு நடைபெற்றது.

இண்டிகோ குளறுபடி: உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

தலைஞாயிறு அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் விவசாயிகள் சாலை மறியல்

வந்தே மாதரம் 100 ஆண்டு நிறைவின்போது அவசரநிலையில் இருந்த நாடு: பிரதமர் மோடி

ரூ. 1,020 கோடி ஊழல்: அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்! - அண்ணாமலை

காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்! Delhi-க்கு 4 ஆவது இடம்! | Air Pollution

SCROLL FOR NEXT