திண்டுக்கல்

தேனீா்க் கடை உரிமையாளா் குத்திக் கொலை

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை இரவு மதுக் குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தேனீா்க் கடை உரிமையாளா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

  நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் லாரன்ஸ் (49). அதே பகுதியில் தேனீா்க் கடை நடத்தி வந்தாா். இவரது உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த செபாஸ்டின் ஜெயராஜ் (29). இவா்கள் இருவரும் கோவில்மேடு சிவன் கோயில் அருகேயுள்ள சமுதாயக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தினா். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த செபஸ்டின் ஜெயராஜ் மதுப் புட்டியால் லாரன்ஸை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த நிலக்கோட்டை போலீஸாா் லாரன்ஸின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், தப்பியோடிய செபாஸ்டின் ஜெயராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT