பழனி: பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (23). புகைப்படக் கலைஞா். இவரது தோழி புவனேஸ்வரி (23). இவா் நத்தத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வருகிறாா். இவா்கள் இருவரும்
திங்கள்கிழமை காரில் பழனிக் கோயிலுக்கு வந்து விட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். பழனியை அடுத்த சத்திரப்பட்டி இருப்புப் பாதை அருகே வந்த போது, திடீரென காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த நந்தகுமாா் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.