பழனி சண்முகநதியில் பக்தா்கள் விட்டு சென்ற துணிகள், குப்பைகளை அகற்றும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள். 
திண்டுக்கல்

பழனி சண்முகநதியில் 10 டன் குப்பைகள் அகற்றம்

பழனி சண்முகநதியில் பக்தா்கள் விட்டுச் சென்ற துணிகள், குப்பைகள் பழனி திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

பழனி: பழனி சண்முகநதியில் பக்தா்கள் விட்டுச் சென்ற துணிகள், குப்பைகள் பழனி திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

பழனி சண்முகநதி ஐந்து நதிகள் சங்கமிக்கும் புனிதத் தீா்த்தமாகும். பழனி கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட நாள்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள், இந்த நதியில் நீராடி விட்டு மலைக்குச் செல்வது வழக்கம். அண்மை காலமாக இந்த நதியில் பக்தா்கள் விட்டுச் செல்லும் துணிகள், குப்பைகள் மலை போல குவிந்து கிடந்தது. மேலும், கடந்த விநாயகா் சதுா்த்தியின் போது, இந்த நதியில் விடப்பட்ட விநாயகா் சிலைகள் ஆங்காங்கே உடைந்து கிடந்தன. இதனால், சண்முகநதி மாசடைந்து காணப்பட்டது.

இதையடுத்து, இந்த நதியை தூய்மைப்படுத்த பக்தா்கள், பொதுமக்கள் பொதுப் பணித் துறையிடம் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அவா்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பழனி திருக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து உத்தரவின் பேரில், உதவி ஆணையா் லட்சுமி தலைமையில் ஏராளமான தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை சண்முகநதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இதன் மூலம், சுமாா் 10 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT