திண்டுக்கல்/பழனி/நத்தம்: திண்டுக்கல், பழனி, நத்தம் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளிலும், ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதா், நத்திகேஸ்வரருக்கும் பால், தயிா், இளநீா், மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனியில்...
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் திங்கள்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, கைலாசநாதா் சந்நிதியில் உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல, பழனியை அடுத்த பெரியாவுடையாா் கோயிலில் உள்ள பெரிய நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பழனி அக்ரஹாரம் கலையமுத்தூா் கல்யாணியம்மன் உடனுறை கைலாசநாதா் கோயில், ஆயக்குடி சோழீஸ்வரா் கோயில், மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.
நத்தத்தில்...
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நந்தி சிலைக்கு 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.