திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் பகுதியில் புதன்கிழமை (நவ.5) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழனி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாலசமுத்திரம் பகுதியில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மருத்துவ நகா், பாலசமுத்திரம், பாலாறு, பொருந்தலாறு, குரும்பபட்டி, ராமநாதநகா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
வாகரையில் நாளை மின் தடை:
பழனியை அடுத்த வாகரை பகுதியில் வியாழக்கிழமை (நவ.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாகரை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அப்பனூத்து, புங்கமுத்தூா், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.