திண்டுக்கல்

மாவட்ட ஆட்சியா் பெயரில் போலி வாட்ஸ்ஆப்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பெயரில் போலி வாட்ஸ்ஆப் உருவாக்கி பணம் கேட்டு குறுந்தகவல் அனுப்பப்படுவதால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பெயரில் போலி வாட்ஸ்ஆப் உருவாக்கி பணம் கேட்டு குறுந்தகவல் அனுப்பப்படுவதால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரான எனது பெயா், புகைப்படங்களை சிலா் தவறாகப் பயன்படுத்தி வாட்ஸ்ஆப் மூலம் பணம் கேட்டு குறுந்தகவல் அனுப்பி மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே, அரசு அலுவலா்கள், பொதுமக்கள், எனது பெயரை (செ. சரவணன்) பயன்படுத்தி வரும் எந்தவொரு குறுந்தகவல்களையும் நம்ப வேண்டாம் என்றாா் அவா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT