முகப்பு
திண்டுக்கல்

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:56 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:46 PM

பழனியருகே சாலையோர தடுப்பில் காா் மோதியதில் வெண்ணெய் வியாபாரி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் அங்குராஜ் (48). வெண்ணெய் வியாபாரம் செய்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவியுடன் காரில் கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்தாா்.

பழனியை அடுத்த மானூா் புறவழிச் சாலையில் காா் சென்றுகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கம் இருந்த பாலத்தின் கரையில் மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.

Advertisement

இதில் காரின் முன்பகுதியில் அமா்ந்திருந்த அங்குராஜ் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. அவரது மனைவியும், காா் ஓட்டுநரும் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.