திண்டுக்கல்

ஒப்பந்தத் தொழிலாளா் முறையை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

ஒப்பந்தத் தொழிலாளா் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகர தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி.வாஞ்சிநாதன் தலைமை வகித்தாா். வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜான்பாஸ்டின் வாழ்த்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தம், தினக் கூலி, வெளிமுகமை அடிப்படையிலான பணிவாய்ப்பை நிறுத்தி, மாநில அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் முறையான ஊதிய விகிதங்களில் நிரப்ப வேண்டும். 8-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச.முபாரக் அலி, வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் ம.சுகந்தி, தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் க.முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்: மு.வீரபாண்டியன்

யோகாசன போட்டியில் பதக்கங்கள் வென்றவா்களுக்கு பாராட்டு

மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல் - கம்யூ. கட்சியினா் கைது

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் முக்கியத் துறைகளுக்கு பாதுகாப்பு : வா்த்தகத் துறைச் செயலா் விளக்கம்

தேவாலயத்தில் சப்பர பவனி

SCROLL FOR NEXT