திண்டுக்கல்

சமூக வலைதளத்தில் பட்டா கத்தியுடன் விடியோ வெளியிட்ட மூவா் கைது

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் பட்டா கத்தியுடன் விடியோ வெளியிட்ட 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.  

வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த 3 போ் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் பட்டா கத்தியுடன் விடியோ வெளியிட்டனா்.

இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம், உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா ஆகியோா் விசாரணை செய்தனா்.

பின்னா், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கட்டகாமன்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் விஜயகுமாா் (23), பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்த சேகா் மகன் சந்தனகுமாா் (20), துரைப்பாண்டி மகன் துரைஅரசு (19) ஆகிய மூவரையும்  போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனா்.  

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

3.1.1976: தனியார் கம்பெனிகள் விமான சர்வீஸ் நடத்த அனுமதி? - மத்திய மந்திரி தகவல்

புல்லட் ரயில் திட்டத்துக்கான சுரங்கப் பணி நிறைவு!

இளைஞா் தற்கொலை

சென்னிமலை ஒன்றியத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் திறப்பு

SCROLL FOR NEXT