மதுரை

வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைத் திருட்டு

DIN

மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை  மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 மதுரை அருகே உள்ள சிலைமான் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (52). இவர் குடும்பத்தினருடன் ஜூலை 14-ஆம் தேதி சென்னை சென்று விட்டார். இந்நிலையில் 15-ஆம் தேதி காலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக உறவினர் பழனி, நடராஜனுக்கு  தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மதுரை வந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது  பீரோவில் இருந்த 18  பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நப ர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
இதுகுறித்து சிலைமான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT