இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
மதுரை கோச்சடை முத்தையா கோயில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சண்முகநாதன் (24). இவர் மதுரை மாவட்டம் பரவையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இரு நாள்களுக்கு முன், வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். நான்குவழிச் சாலையில் வைகை பாலத்தில் வந்தபோது நிலைத்தடுமாறி தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சண்முகநாதனை அப்பகுதியினர் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி சண்முகநாதன் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.