பனையூர் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை மாநகராட்சி நெல்பேட்டை பகுதியில் பனையூர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:47 PM
மதுரை மாநகராட்சி நெல்பேட்டை பகுதியில் பனையூர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மதுரை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதன்படி, வைகை தென்கரையில் நெல்பேட்டை பகுதியில் பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அப்பகுதியில் ஒரு கட்டடத்தின் சுற்றுச்சுவரை மாநகராட்சியினர் திங்கள்கிழமை இடித்து அப்புறப்படுத்தனர்.
பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.