மதுரை

பைக் மீது கார் மோதியதில் இளைஞர் சாவு

DIN

ஆஸ்டின்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில்  இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். 
  மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அருண் தமிழரசன். உயர்நீதிமன்ற அரசு வழக்குரைஞர். இவரது மகன் பாலாஸ்ரீஹரி (22). அருண் தமிழரசனின் தம்பி சக்திவேல். இவர் மலேசிய குடியுரிமை பெற்றவர். இவரது மகன் திபின்குமார்(18). இவர் விடுமுறைக்காக மலேசியாவிலிருந்து பெரியப்பா அருண் தமிழரசன் வீட்டுக்கு வந்துள்ளார்.
 இந்நிலையில் பாலாஸ்ரீஹரியும், திபின்குமாரும் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் நான்கு வழிச்சாலை பகுதியில் வந்துகொண்டிருந்தனர். தனக்கன்குளம் பிரிவு அருகே வந்தபோது, விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீஸார் இருவரையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே திபின்குமார் உயிரிழந்தார்.பாலாஸ்ரீஹரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT