மதுரை

தனியார் மருத்துவமனையில் ரூ.1.15 லட்சம் திருட்டு

DIN

மதுரையில் தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு பூட்டை உடைத்து ரூ.1.15 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை கோச்சடை பென்னர் காலனியைச் சேர்ந்த மருத்துவர் அமீர் பாஷா(42). இவர் மாட்டுத்தாவணி பிரஸ் கிளப் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். தினசரி காலை முதல் இரவு வரை இயங்கும் இந்த மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வந்துள்ளார். இரவு நேரங்களில் மருத்துவமனை பூட்டப்பட்டு விடும். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அமீர் பாஷா மருத்துவமனையை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். இதில் நள்ளிரவில் மருத்துவமனைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மருத்துவரின் அறையில் இருந்த ரூ.1.15 லட்சத்தை திருடிச் சென்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக அமீர்பாஷா அளித்தப் புகாரின்பேரில் கோ.புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT