மதுரை

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக பாஜக புகார்

DIN

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி பாஜகவினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கருப்பாயூரணி பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பங்கு பெறாதவர்களின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். அதன்படி சட்டப்பேரவை உறுப்பினர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன், செயலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தனர். 
இந்தநிலையில், அங்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தன்மீதான புகாரை மறுத்து பொதுமக்களிடம் விளக்கமளித்தாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT