மதுரை

கருணாநிதி மறைவால் அதிர்ச்சியில் இறந்த 5 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம்

DIN

திமுக தலைவர் மு.கருணாநிதி காலமான போது, அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
 திமுக தலைவர் மு.கருணாநிதி ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்த மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த ஞானசேகரன்,  கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்றபோது நெரிசலில் சிக்கி இறந்த துரை உள்பட மதுரை மாவட்டத்தில் 5 பேருக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 
அதற்கான வரைவோலையை திமுக மாநகர் மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் புதன்கிழமை வழங்கினார். பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வ.வேலுசாமி, பெ.குழந்தைவேல், ஜெயராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT