மதுரை

மதுரை அருகே கார் ஓட்டுநர் குத்திக் கொலை

DIN

மதுரை மாவட்டம் காடுபட்டி அருகே கார் ஓட்டுநரை புதன்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் காடுபட்டி அருகே உள்ள கச்சிராயிருப்பைச் சேர்ந்தவர் விஜயன்(30). வாடகைக்கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பாண்டி. இருவருக்கும் இடையே இருசக்கர வாகனம் நிறுத்துவதில் புதன்கிழமை காலை தகராறு ஏற்பட்டு அப்பகுதியினர் விலக்கி விட்டுள்ளனர். 
இந்நிலையில் புதன்கிழமை இரவில் மதுபோதையில் வந்த பாண்டி, விஜயனுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த விஜயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பாண்டி அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவம் தொடர்பாக காடுபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாண்டியைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT