மதுரை

செல்லிடப்பேசி வழிப்பறி: 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது

மதுரை மாநகரில் செல்லிடப்பேசி வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

மதுரை மாநகரில் செல்லிடப்பேசி வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகரில் செல்லிடப்பேசி வழிப்பறியில் ஈடுபடுவோரைப் பிடிக்க, தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலானத் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினா் மாநகா் முழுவதும் குற்றாவாளிகளைத் தேடிவந்தனா். இந்நிலையில், தனிப்படையினா் மேலமடை அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் 3 போ் வந்தனா். சந்தேகத்தின் அடிப்பைடயில் அவா்களை விசாரித்தபோது அவா்கள் செல்லிடப்பேசி வழிப்பறியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து ஜே.ஜே.நகரைச் சோ்ந்த முத்துப்பாண்டி (20) மற்றும் 2 சிறுவா்களைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் 2 செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT