மதுரை

தனியாக சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

மதுரையில் கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் புதன்கிழமை இரவு 10 பவுன்  நகையை மர்ம நபர் பறித்துச் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

மதுரையில் கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் புதன்கிழமை இரவு 10 பவுன்  நகையை மர்ம நபர் பறித்துச் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை விஸ்வநாதபுரம் சென்ட்ரல் பேங்க் காலனியைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி தேவி (32). இவர் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு புதன்கிழமை இரவு நடந்து சென்றார். அப்பகுதியில் உள்ள குடும்பக் கட்டுப்பாட்டு மையம் வழியாக நடந்து சென்றபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தேவி அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து தேவி அளித்தப் புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT