மதுரை

மாநில கராத்தே போட்டி மாணவர் தேர்வு முகாம்

மதுரையில் மாநில கராத்தே போட்டிக்கான மாணவர் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

மதுரையில் மாநில கராத்தே போட்டிக்கான மாணவர் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரையில் சோபுகாய் கோஜூரியூ கராத்தேப் பள்ளியின் மாநில அளவிலான போட்டிகள் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மாணவி ஜெயஸ்ரீ சிறப்பாக செயல்பட்டு சிறந்த மாணவியாக 
தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை சோபுகாய் கோஜூரியூ பள்ளியின் தலைமை பயிற்சியாளர் ரென்சி சுரேஷ்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர்கள் பாரத், கார்த்திக், கௌரி சங்கர், அங்குவேல், பாலகாமராஜன், ஆனந்த், மாரி, யோகேஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT