மதுரை

கரும்பு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஜூன் 20-இல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மதுரையில் ஆட்சியர்

DIN

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மதுரையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூன் 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
 அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின்  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகக் குழு கூட்டம் மதுரையில் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் என்.பழனிசாமி தலைமை வகித்தார்.
  சங்கத்தின் தாலுகா செயலர்கள் அய்யங்காளை (திருமங்கலம்), கே.மொக்கமாயன் (உசிலம்பட்டி),  மீனாட்சிபுரம் பிச்சை (மேலூர்) நிர்வாகிகள் மலையாண்டி, ஸ்டாலின் குமார், போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை செய்த கரும்பு பாக்கி ரூ.19 கோடியை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்குவது, விவசாயக் கடன்களை முழுமையாக மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்வது, ஓராண்டுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ள விவசாய பம்ப் செட்களுக்கான இலவச மின்இணைப்பை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 20-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT