மதுரை

திருட்டு வழக்கில் கைதாகி  தப்பிய சிறுவன் பிடிபட்டான்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது

DIN

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது வியாழக்கிழமை தப்பியோடிய சிறுவனை காவல்துறையினர் பிடித்தனர்.
 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ராஜபாண்டி. இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு ராஜபாண்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 
 இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ராஜபாண்டியைக் காணவில்லை. அவருக்குப் பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினர் பல இடத்தில் தேடினர். அப்போது மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் ராஜபாண்டியை சுற்றி திரிந்தது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் பிடித்து சிறார் பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT