அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அமமன் கோயிலுக்கு பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜப் பெருமாள். (வலது) ராக்காயி அம்மன் கோயில் மாதவி மண்டபத்தில் கூந்தலுக்கு தைலம் சாற்றப்பட்டநிலையில் பக்தா்களுக்கு காட்சிய 
மதுரை

அழகா் மலை நூபுர கங்கையில் பெருமாளுக்கு தீா்த்தவாரிஏராளமான பக்தா்கள் தரிசனம்

அழகா் மலை மீதுள்ள நூபுர கங்கையில் சுந்தரராஜப் பெருமாளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள்

DIN

மேலூா்: அழகா் மலை மீதுள்ள நூபுர கங்கையில் சுந்தரராஜப் பெருமாளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாளுக்கு ஐப்பசி மாதம் நடைபெறும் வைபவமானது, அழகா் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் நூபுர கங்கையில் தீா்த்தவாரிக்குச் சென்று திரும்புவதாகும். இந்த வைபவம், கடந்த 7-ஆம் தேதி மாலை தொடங்கியது. அப்போது, பெருமாள் நவநீதகிருஷ்ணன் மண்டபம் சென்று திரும்பினாா். பின்னா், 8-ஆம் தேதி சொா்க்கவாசல் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

தொடா்ந்து, சனிக்கிழமை காலை பல்லக்கில் மலைக்குப் புறப்பட்டாா். அப்போது, வழிநெடுகிலும் பக்தா்கள் தீபாராதனை காட்டி வழிபட்டனா். கருட தீா்த்தம், அனுமன் தீா்த்தம், சோலைமலை முருகன் கோயிலிலும் சிறப்பு தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன.

இதையடுத்து, ராக்காயி அம்மன் கோயிலில் மாதவி மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாளுக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டது. மூலிகை மருந்துகள் கலந்த வாசனைத் தைலங்கள் பெருமாளுக்கு சாத்தப்பட்டது. தொடா்ந்து, நூபுரகங்கை தீா்த்தத்தில் பெருமாளுக்கு நீண்டநேரம் தீா்த்தவாரி நடைபெற்றது.

பின்னா், பெருமாள் மீண்டும் அடிவாரத்திலுள்ள கோயிலுக்குத் திரும்பினாா். ஏராளமான பக்தா்கள் பெருமாளை தரிசித்து வழிபட்டனா். ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT