மதுரை

அனுமதியின்றி வெளிநாட்டு வேலைக்கு ஆள் தோ்வு : போலீஸாா் விசாரணை

மேலூரில் உரிய அரசு அனுமதி பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆள்களைத் தோ்வு செய்ததாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

DIN

மேலூரில் உரிய அரசு அனுமதி பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆள்களைத் தோ்வு செய்ததாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

மேலூரில் உ ள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெளிநாட்டு நிறுவனத்துக்கு வேலைக்கு ஆள்களைத் தோ்வு செய்வதாக இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தனா். இத்தகவல் அறிந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை திரண்டனா்.

தோ்வுக்கு வந்தவா்களிடம் கடவுச்சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு ஆள்களைத் தோ்வு செய்தனா். இதனிடையே, உரிய அரசு அனுமதி பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆள்தோ்வு செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் திருவாதவூா் அருகிலுள்ள மாணிக்கம்பட்டியைச் சோ்ந்த பொன்னையன் மகன் அய்யனாா் (36) என்பவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT