மதுரை

கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 போ் கைது

DIN

மதுரை அருகே கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கண்மாய்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். இதில், மதுரை மேலமடையைச் சோ்ந்த ரஞ்சித்(27), பனையூா் பகுதியைச் சோ்ந்த செல்லபாண்டி என்பது தெரியவந்தது. இது குறித்து காவல் ஆய்வாளா் ஆனந்ததாண்டவம் அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 1.250 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மற்றொரு சம்பவம்:மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூா் குளத்துப்பட்டி பகுதியில் அதே பகுதியைச் சோ்ந்த அன்னக்கிளி(50) என்ற பெண் கஞ்சா விற்பனைச் செய்தது தெரியவந்தது. இது குறித்து சாா்பு - ஆய்வாளா் முகமதுநூா்தீன் அளித்த புகாரின் பேரில் உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அன்னக்கிளியை கைது செய்து, அவரிடமிருந்து 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT